யாழ்ப்பாணத்திலுள்ள நல்லை ஆதீன குரு முதல்வரை ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று காலை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
யாழ்ப்பாணத்திற்கு தேர்தல் பரப்புரைக்காக வருகை தந்துள்ள சஜித் பிரேமதாச இன்று காலை நல்லூர் ஆலய வீதியில் உள்ள நல்லை ஆதீனத்திற்கு சென்றிருந்தார். அங்கு நல்லை ஆதீன குருமுதல்வரிடம் ஆசியினை பெற்றதுடன் அரசியல் நிலவரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் - கிளிநொச்சி பிரதான வேட்பாளர் கணேஷ் வேலாயுதம், உமாசந்திர பிரகாஷ், அ.கிருபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.





0 Comments