வடக்கு-கிழக்கில் களமிறக்கப்பட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர தமிழ் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் சிங்கள தேசத்தை எதிர்த்து கருத்துச் சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பை பலவீனப்படுத்துகின்றதைப் போன்றே அவர்களின் வார்த்தைகள், அவர்களுடைய செயற்பாடுகள் அமைந்து உள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிங்கள வாக்குகளால் ஜனாதிபதியை தெரிவு செய்து விட்டோம். ஆகவே வடக்கு கிழக்கிலே எங்களுடைய ஆளுமை தொடரும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சொல்லியிருக்கிறார். இதிலிருந்து ஒரு செய்தியை நாங்கள் உணர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், போதைவஸ்து கடத்தலுக்கும் எனக்கும் சம்மந்தம் இருப்பதாகவும், மாதுபான சாலைகள் வைத்திருப்பதாகவும் கருணா மிக மோசமான கருத்துக்களை கூறி வருகின்றார்.
அவருடைய கருத்துக்கு நான் சவால் விடுகிறேன். அவருக்கு எதிராக நீதிமன்றம் செல்ல இருக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
உண்மையிலேயே அவர் ஒரு ஆண் மகனாக இருந்தால் அவர் இதை உடனடியாக நிரூபிக்க வேண்டும்.



0 Comments