இயற்கை பொருட்களால் ப்ளீச்சிங் செய்யும் போது, எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் சரும நிறத்தை அதிகரிக்கலாம்.அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை இரவு தூங்கும் முன் செய்தால், சீக்கிரம் வெள்ளையாகலாம்.சரி, இப்போது வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே ப்ளீச்சிங் செய்வது எப்படி என்று காண்போம்.
முதலாவது வழி
தேவையான பொருட்கள்
எலுமிச்சை
தேன் செய்முறை
ஒரு பௌலில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.தயாரித்த கலவையை முகத்தில் தடவும் முன், முகத்தை நீரால் கழுவிக் கொள்ளவும்.அதன் பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்கவும்.
பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்தால், சரும நிறத்தில் ஒரு நல்ல மாற்றத்தை நீங்கள் காணலாம்.
இரண்டாவது வழி
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு , பால்
செய்முறை
முதலில் துவரம் பருப்பை நீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.பின் அதை நன்கு அரைத்து, அத்துடன் சிறிது காய்ச்சாத பாலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.பின்பு அந்த கலவையை முகத்தில் தடவி நன்கு காய வைக்கவும்.
இறுதியில் குளிர்ந்த நீரால் முகத்தை தேய்த்து கழுவ வேண்டும்.இப்படி அடிக்கடி முகத்திற்கு செய்து வந்தால், சரும நிறத்தில் ஒரு நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.






0 Comments