ஸ்ரீலங்காவில் பொது மலசலகூடம் ஒன்றுக்கு வைக்கப்பட்டுள்ள பலகை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதில் “பெண்” என்று எழுதுவதறகு பதிலாக “ஆண்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் சரியாக எழுதப்பட்டுள்ளது.
பெண்களில் மலசலகூடத்தை காட்டும் குறித்த பலகையில் தமிழில் மட்டும் பிழையாக எழுதப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பலகை எங்கு வைக்கப்பட்டுள்ளது என்ற தகவல்கள் வெளிவராத நிலையில், தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



0 Comments